ADVERTISEMENT
விபத்துக்கள் தொடர்பான வழக்குகளில், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்குவதில் கால தாமதம் ஏற்படுகிறது. இன்சூரன்ஸ் நிறுவனம் கொடுத்த தொகை, ஐந்து கோடி ரூபாய் கோர்ட்டில் முடக்கப்பட்டுள்ளதால், பல குடும்பங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்ததாக, அதிகமான விபத்துக்களைச் சந்திக்கிற மாவட்டமாக கோவை விளங்கி வருகிறது. இதைக் குறைப்பதற்கு, காவல்துறை எடுக்கும் நடவடிக்கைகள், பெரிய அளவில் பலன் தருவதாக இல்லை. இது ஒரு புறமிருக்க, விபத்துக்களில் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு கிடைப்பதும் தாமதமாகி, மக்களை வாட்டி வதைக்கிறது.
மூவாயிரம்... நாலாயிரம்!
மோட்டார் வாகன விபத்துக்களில் காயமடைந்தவர்கள், இழப்பீடு பெறுவதற்காக, கோவையில், எம்.சி.ஓ.பி., வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்தினர், இழப்பீடு கோரும் வழக்குகள், நான்காவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது. சிறப்பு கோர்ட் திறக்கப்பட்ட பிறகும், வழக்குகள் தேக்கம் அதிகரித்து வருகிறது.
கோர்ட்டில் நிலுவையிலுள்ள வழக்குகள், பாதிக்கப்பட்டவர் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் சம்மதத்திற்கு பிறகு, 'லோக் அதாலத்' விசாரணைக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. நிறைய வழக்குகளுக்கு தீர்வு கிடைத்தாலும், வழக்குகள் தேக்கம் குறைந்த பாடில்லை. சிறப்பு கோர்ட்டில் மாதந்தோறும், 200 புதிய வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன.
நிலுவையிலுள்ள வழக்குகளின் எண்ணிக்கை, 2015, ஜூலையில், 3200 ஆகவும், 2016, ஜூலையில் ௩6௦௦ ஆகவும் இருந்து, கடந்த ஜூலையில், 4,000 ஆக உயர்ந்து விட்டது. சென்னை போன்ற நகரங்களில், விபத்து இழப்பீடு வழக்கிற்காக வாரந்தோறும் 'லோக் அதாலத்' நடத்தப்படுகிறது. கோவையில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், மாதந்தோறும் லோக் அதாலத் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே லோக் அதாலத் நடத்தப்படுகிறது. வழக்குகள் தேங்க இதுவும் ஒரு முக்கியக் காரணம். இதேபோல, காயம்பட்டவருக்கு எத்தனை சதவீதம் ஊனம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து அரசு மருத்துவர் குழு சான்றிதழ் அளிக்கவும் பெரும் தாமதமாகிறது.
விபத்து வழக்கில், பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்குவதற்கு, நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. தீர்ப்புக்கு பிறகு, இழப்பீட்டு தொகையை இன்சூரன்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் காசோலையாக வழங்குகிறது. மாவட்ட கருவூலத்தில், பணம் செலுத்தப்பட்டு, கோர்ட் மூலமாக, பாதிக்கப்பட்டவர் பெயருக்கு, இழப்பீட்டு தொகை காசோலையாக வழங்கப்பட்டு வந்தது.
இந்த முறை மாற்றப்பட்டு, இழப்பீட்டு தொகையை பாதிக்கப்பட்டவர் வங்கிக்கணக்கில் நேரடியாக பணத்தை செலுத்தும் புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டது.
இதனால், உடனடியாக பணம் கிடைக்கும் என்று பாதிக்கப்பட்டவர்கள் எதிர் பார்த்தனர். ஆனால், நிலைமை தலைகீழாகி விட்டது.
தீர்ப்புக்கு பிறகு, ஒரு மாதத்திற்குள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீட்டு தொகையினை கோர்ட்டிற்கு செலுத்த வேண்டும். அதன்படியே, இழப்பீடு தொகையினை மொத்தமாக, நீதிமன்றத்திற்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அனுப்பி வைக்கின்றன. எந்த வழக்கிற்கு, எவ்வளவு இழப்பீடு என பிரித்து, அவரவர் வங்கி கணக்கில் செலுத்த வேண்டியது, கோர்ட் பொறுப்பு.
ஆனால், பணத்தைப் பிரித்து, வங்கிக் கணக்குகளில் செலுத்துவதற்கு, கோர்ட்டில் போதிய ஊழியர்கள் இல்லை.
கண்ணீருடன் காத்திருப்பு!
இதனால், உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ஐந்து மாதங்களுக்கு பிறகே, வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது.
இவ்வாறு, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கிய இழப்பீடு தொகை, ஐந்து கோடி ரூபாய் வரை, தற்போது கோர்ட்டில் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பல குடும்பங்கள், இந்தத்தொகைக்காக கண்ணீரோடு காத்திருக்கின்றன.
விபத்து வழக்கில் ஆஜராகும் வக்கீல் அன்புச்செழியன் கூறுகையில், ''விபத்து வழக்குகளில், தீர்ப்புப் பெறவே பல ஆண்டுகளாகிறது.
''தீர்ப்பு வந்தபின், இழப்பீடு பெற பல மாதங்களாகிறது. கோர்ட்டில் போதுமான ஊழியர்கள் இல்லை. வேலைப்பளுவால், வங்கி கணக்கில் பணத்தை செலுத்த முக்கியத்துவம் கொடுப்பதில்லை. கூடு
தல் ஊழியர்களை நியமிப்பதே, இதற்குத் தீர்வாகும்,'' என்றார்.
ஒரு குடும்பத்தின் தலையாக இருக்கும் ஒருவர், விபத்தில் உயிரிழந்து விட்டாலோ, இயங்க முடியாமல் முடங்கி விட்டாலோ, அந்த குடும்பம் படும் துயரத்தை வார்த்தைகளில் விவரிக்க இயலாது. தாமதமாகக் கிடைக்கும் நீதி மட்டுமில்லை; நிதியும் கூட, மறுக்கப்பட்டதாகவே மாறிவிடும்.
எலும்பு ஆஸ்பத்திரி ஏஜென்ட்கள்!
கோவையிலுள்ள சில எலும்பு மருத்துவ
மனைகள், அரசு மருத்துவமனையில் ஏஜென்ட்களை நியமித்தும், முக்கியச் சாலைகளில் ஆம்புலன்ஸ்களை நிறுத்தியும், வலுக்கட்டாயமா
கவும், ஏமாற்றியும் விபத்தில் பாதிக்கப்பட்டோரை கடத்தி வருகின்றன.
சிறு காயங்களுக்கும் பெரிய அளவில் சிகிச்சை தந்ததாக ஆவணங்கள் தயாரித்து, கோர்ட்டில் வழக்குத் தொடுத்து, இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் பணம் பறிக்கின்றன. இந்த தொகையில், எலும்புத்துண்டு போல, பாதிக்கப்பட்டவருக்கு சிறு தொகை மட்டுமே தரப்படுகிறது. இதைப் பற்றி விசாரித்தால், பல 'பகீர்' உண்மைகள் தெரியவரும்.
--நமது நிருபர்-
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்ததாக, அதிகமான விபத்துக்களைச் சந்திக்கிற மாவட்டமாக கோவை விளங்கி வருகிறது. இதைக் குறைப்பதற்கு, காவல்துறை எடுக்கும் நடவடிக்கைகள், பெரிய அளவில் பலன் தருவதாக இல்லை. இது ஒரு புறமிருக்க, விபத்துக்களில் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு கிடைப்பதும் தாமதமாகி, மக்களை வாட்டி வதைக்கிறது.
மூவாயிரம்... நாலாயிரம்!
மோட்டார் வாகன விபத்துக்களில் காயமடைந்தவர்கள், இழப்பீடு பெறுவதற்காக, கோவையில், எம்.சி.ஓ.பி., வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்தினர், இழப்பீடு கோரும் வழக்குகள், நான்காவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது. சிறப்பு கோர்ட் திறக்கப்பட்ட பிறகும், வழக்குகள் தேக்கம் அதிகரித்து வருகிறது.
கோர்ட்டில் நிலுவையிலுள்ள வழக்குகள், பாதிக்கப்பட்டவர் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் சம்மதத்திற்கு பிறகு, 'லோக் அதாலத்' விசாரணைக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. நிறைய வழக்குகளுக்கு தீர்வு கிடைத்தாலும், வழக்குகள் தேக்கம் குறைந்த பாடில்லை. சிறப்பு கோர்ட்டில் மாதந்தோறும், 200 புதிய வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன.
நிலுவையிலுள்ள வழக்குகளின் எண்ணிக்கை, 2015, ஜூலையில், 3200 ஆகவும், 2016, ஜூலையில் ௩6௦௦ ஆகவும் இருந்து, கடந்த ஜூலையில், 4,000 ஆக உயர்ந்து விட்டது. சென்னை போன்ற நகரங்களில், விபத்து இழப்பீடு வழக்கிற்காக வாரந்தோறும் 'லோக் அதாலத்' நடத்தப்படுகிறது. கோவையில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், மாதந்தோறும் லோக் அதாலத் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே லோக் அதாலத் நடத்தப்படுகிறது. வழக்குகள் தேங்க இதுவும் ஒரு முக்கியக் காரணம். இதேபோல, காயம்பட்டவருக்கு எத்தனை சதவீதம் ஊனம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து அரசு மருத்துவர் குழு சான்றிதழ் அளிக்கவும் பெரும் தாமதமாகிறது.
விபத்து வழக்கில், பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்குவதற்கு, நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. தீர்ப்புக்கு பிறகு, இழப்பீட்டு தொகையை இன்சூரன்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் காசோலையாக வழங்குகிறது. மாவட்ட கருவூலத்தில், பணம் செலுத்தப்பட்டு, கோர்ட் மூலமாக, பாதிக்கப்பட்டவர் பெயருக்கு, இழப்பீட்டு தொகை காசோலையாக வழங்கப்பட்டு வந்தது.
இந்த முறை மாற்றப்பட்டு, இழப்பீட்டு தொகையை பாதிக்கப்பட்டவர் வங்கிக்கணக்கில் நேரடியாக பணத்தை செலுத்தும் புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டது.
இதனால், உடனடியாக பணம் கிடைக்கும் என்று பாதிக்கப்பட்டவர்கள் எதிர் பார்த்தனர். ஆனால், நிலைமை தலைகீழாகி விட்டது.
தீர்ப்புக்கு பிறகு, ஒரு மாதத்திற்குள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீட்டு தொகையினை கோர்ட்டிற்கு செலுத்த வேண்டும். அதன்படியே, இழப்பீடு தொகையினை மொத்தமாக, நீதிமன்றத்திற்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அனுப்பி வைக்கின்றன. எந்த வழக்கிற்கு, எவ்வளவு இழப்பீடு என பிரித்து, அவரவர் வங்கி கணக்கில் செலுத்த வேண்டியது, கோர்ட் பொறுப்பு.
ஆனால், பணத்தைப் பிரித்து, வங்கிக் கணக்குகளில் செலுத்துவதற்கு, கோர்ட்டில் போதிய ஊழியர்கள் இல்லை.
கண்ணீருடன் காத்திருப்பு!
இதனால், உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ஐந்து மாதங்களுக்கு பிறகே, வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது.
இவ்வாறு, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கிய இழப்பீடு தொகை, ஐந்து கோடி ரூபாய் வரை, தற்போது கோர்ட்டில் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பல குடும்பங்கள், இந்தத்தொகைக்காக கண்ணீரோடு காத்திருக்கின்றன.
விபத்து வழக்கில் ஆஜராகும் வக்கீல் அன்புச்செழியன் கூறுகையில், ''விபத்து வழக்குகளில், தீர்ப்புப் பெறவே பல ஆண்டுகளாகிறது.
''தீர்ப்பு வந்தபின், இழப்பீடு பெற பல மாதங்களாகிறது. கோர்ட்டில் போதுமான ஊழியர்கள் இல்லை. வேலைப்பளுவால், வங்கி கணக்கில் பணத்தை செலுத்த முக்கியத்துவம் கொடுப்பதில்லை. கூடு
தல் ஊழியர்களை நியமிப்பதே, இதற்குத் தீர்வாகும்,'' என்றார்.
ஒரு குடும்பத்தின் தலையாக இருக்கும் ஒருவர், விபத்தில் உயிரிழந்து விட்டாலோ, இயங்க முடியாமல் முடங்கி விட்டாலோ, அந்த குடும்பம் படும் துயரத்தை வார்த்தைகளில் விவரிக்க இயலாது. தாமதமாகக் கிடைக்கும் நீதி மட்டுமில்லை; நிதியும் கூட, மறுக்கப்பட்டதாகவே மாறிவிடும்.
எலும்பு ஆஸ்பத்திரி ஏஜென்ட்கள்!
கோவையிலுள்ள சில எலும்பு மருத்துவ
மனைகள், அரசு மருத்துவமனையில் ஏஜென்ட்களை நியமித்தும், முக்கியச் சாலைகளில் ஆம்புலன்ஸ்களை நிறுத்தியும், வலுக்கட்டாயமா
கவும், ஏமாற்றியும் விபத்தில் பாதிக்கப்பட்டோரை கடத்தி வருகின்றன.
சிறு காயங்களுக்கும் பெரிய அளவில் சிகிச்சை தந்ததாக ஆவணங்கள் தயாரித்து, கோர்ட்டில் வழக்குத் தொடுத்து, இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் பணம் பறிக்கின்றன. இந்த தொகையில், எலும்புத்துண்டு போல, பாதிக்கப்பட்டவருக்கு சிறு தொகை மட்டுமே தரப்படுகிறது. இதைப் பற்றி விசாரித்தால், பல 'பகீர்' உண்மைகள் தெரியவரும்.
--நமது நிருபர்-