Load Image
Advertisement

திருப்பூரில் துவங்குமா மொபைல் கோர்ட்?

திருப்பூர் : போக்குவரத்து மீறல் போன்ற சிறு வழக்குகள் விசாரிக்கும் வகையில், திருப்பூரில் மொபைல் கோர்ட் அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
வளர்ந்து வரும் தொழில் நகரான திருப்பூரில், நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. வாகனங்கள் எண்ணிக்கை, மக்கள் தொகை அதிகரிப்பு போன்றவற்றால் விபத்துகள், குற்றச்சம்பவங்களும் பெருகியுள்ளன. வாகன போக்குவரத்து அதிகரித்து வருவதால், போக்குவரத்து விதிமீறல், சிறு விபத்துகளும் அதிகளவில் நடக்கிறது.
திருப்பூர் மாநகரில், ஒரு துணை கமிஷனர் மேற்பார்வையில், உதவி கமிஷனர் கண்காணிப்பின் கீழ், இரண்டு போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன்களும் ஒரு போக்குவரத்து புலனாய்வு பிரிவும் இயங்குகிறது.
மாநகர எல்லையில் ஏறத்தாழ, ஐந்து லட்சம் வாகனங்கள் உள்ளன. குறுகலான ரோடுகள், கண்மூடித்தனமான வேகம், அதிக பாரம், கூடுதல் பயணிகள் என போக்குவரத்து விதி மீறல்கள் அதிகளவில் உள்ளது.
சிக்னல்கள், அதிக போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதிகளில் போக்குவரத்து போலீசார் கண்காணித்து, வாகன ஓட்டிகள் மீது தினமும் வழக்கு பதிவு செய்கின்றனர். சராசரியாக நாளொன் றுக்கு, ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படுகிறது. இது தவிர, கோர்ட்டுக்கு செல்லும் வழக்குகள் ஏராளம்.
திருப்பூர் மாநகர அந்தஸ்துக்கு தரம் உயர்த்தப்பட்டும், இங்கு நீதித்துறை சார்பில் நடமாடும் நீதிமன்றம் துவங்கப்படாமல் உள்ளது. இதனால், கோர்ட்டுகளில் வழக்கமான பணிகளுக்கிடையே, இது போன்ற சிறு வழக்குகள் விசாரித்து தீர்வு காண்பதில், கோர்ட்டுக்கு கூடுதல் பணிப்பளு ஏற்படுகிறது.
இதற்கு தீர்வு காணும் வகையில், மொபைல் கோர்ட் அமைக்கப்பட்டால், பல தரப்புக்கும் வசதியாக இருக்கும். வாகன விதி மீறல் வழக்குப்பதிவு செய்வதில் ஏற்படும் சிர மங்கள், முறைகேடுகள் தவிர்க்கப்படும்.
மாவட்ட நிர்வாகமும், மாநகர போலீஸ் கமிஷனரகம் சார்பிலும், இது குறித்து கடந்த இரு ஆண்டாகவே தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement