அதிக கட்டணத்தில் சுவிதா ரயில் எலி, கரப்பான் தொல்லை இலவசம்
கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்க செயலர் எட்வர்டு ஜெனி கூறியதாவது:
நாகர்கோவிலில் இருந்து, சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும், சுவிதா ரயில் பழைய பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. அதில், மூட்டை பூச்சி, கரப்பான் பூச்சி, எலி தொல்லை உள்ளது. ஏப்., 16ல், நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு, இரண்டடுக்கு, 'ஏசி' கட்டணம், 4,975 ரூபாய் செலுத்தி பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
சுவிதா சிறப்பு ரயிலில் கட்டணம் அதிகம் வசூலித்தும், பெட்டிகளில், கூடுதல் வசதி இல்லை; கூடுதல் கட்டணம் வசூலிக்கும் அந்த ரயிலில், நவீன தொழில்நுட்பத்தில், தயாரான புதிய பெட்டிகளை இணைத்து இயக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
நாகர்கோவிலில் இருந்து, சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும், சுவிதா ரயில் பழைய பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. அதில், மூட்டை பூச்சி, கரப்பான் பூச்சி, எலி தொல்லை உள்ளது. ஏப்., 16ல், நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு, இரண்டடுக்கு, 'ஏசி' கட்டணம், 4,975 ரூபாய் செலுத்தி பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
சுவிதா சிறப்பு ரயிலில் கட்டணம் அதிகம் வசூலித்தும், பெட்டிகளில், கூடுதல் வசதி இல்லை; கூடுதல் கட்டணம் வசூலிக்கும் அந்த ரயிலில், நவீன தொழில்நுட்பத்தில், தயாரான புதிய பெட்டிகளை இணைத்து இயக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!