விழுப்புரம் - தஞ்சாவூர் ரயில் பாதை ரூ.218 கோடியில் மின் மயமாகிறது
விழுப்புரத்திலிருந்து தஞ்சாவூர் வரையிலான ரயில் பாதையை மின் மயமாக்க முடிவெடுக்கப்பட்டு, அந்த திட்டத்திற்கு, 218 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக, மத்திய அரசு அறிவித்து
உள்ளது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழகத்தில், ரயில்வே திட்டங்கள் அனைத்தும் ஆமை வேகத்திலேயே நடக்கின்றன. அண்டை மாநிலமான கேரளாவில், அனைத்து ரயில் பாதைகளுமே, மின் மயமாக்கப்பட்டே ரயில்கள் இயக்கப் படுகின்றன; ஆனால், தமிழகத்தில் மின் மயமாக்கப்படாத பாதைகளே, அதிகமாக உள்ளன. மதுரை - கன்னியாகுமரிக்கு இடையிலான பாதையை, மின் மயமாக்க வேண்டுமென்ற கோரிக்கை, நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில்தான், விழுப்புரம்- - தஞ்சாவூர் இடையிலான ரயில் பாதையை, மின் மயமாக்கும் திட்டம், தற்போது துாசு தட்டப்பட்டு உள்ளது. இந்த திட்டம், கடந்த மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த திட்டம், விழுப்புரம்,கடலுார், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை திருவாரூர் என, 228 கி.மீ., துாரம் உடையது. இந்த பாதைதான், தற்போது மின் மயமாக்கப்பட உள்ளது.மின் மயமாக்கும் பணியை, 'ரயில்வே விகாஸ் நிகாம் லிமிடெட்' நிறுவனம் மேற்கொள்ளும். இதற்காக, 218 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.
தமிழகத்தில், முக்கிய துறைமுகமாக வளர்ந்து வரும் கடலுார் துறைமுகம், இத்திட்டத்தை, பெரிதும் நம்பி இருந்தது. மின் மயமாக்கப்பட்ட பின், வர்த்தக ரீதியாக, கடலுார் துறைமுகமும், காரைக்கால் துறைமுகமும் பெரிய அளவில் பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- நமது டில்லி நிருபர் -
உள்ளது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழகத்தில், ரயில்வே திட்டங்கள் அனைத்தும் ஆமை வேகத்திலேயே நடக்கின்றன. அண்டை மாநிலமான கேரளாவில், அனைத்து ரயில் பாதைகளுமே, மின் மயமாக்கப்பட்டே ரயில்கள் இயக்கப் படுகின்றன; ஆனால், தமிழகத்தில் மின் மயமாக்கப்படாத பாதைகளே, அதிகமாக உள்ளன. மதுரை - கன்னியாகுமரிக்கு இடையிலான பாதையை, மின் மயமாக்க வேண்டுமென்ற கோரிக்கை, நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில்தான், விழுப்புரம்- - தஞ்சாவூர் இடையிலான ரயில் பாதையை, மின் மயமாக்கும் திட்டம், தற்போது துாசு தட்டப்பட்டு உள்ளது. இந்த திட்டம், கடந்த மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த திட்டம், விழுப்புரம்,கடலுார், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை திருவாரூர் என, 228 கி.மீ., துாரம் உடையது. இந்த பாதைதான், தற்போது மின் மயமாக்கப்பட உள்ளது.மின் மயமாக்கும் பணியை, 'ரயில்வே விகாஸ் நிகாம் லிமிடெட்' நிறுவனம் மேற்கொள்ளும். இதற்காக, 218 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.
தமிழகத்தில், முக்கிய துறைமுகமாக வளர்ந்து வரும் கடலுார் துறைமுகம், இத்திட்டத்தை, பெரிதும் நம்பி இருந்தது. மின் மயமாக்கப்பட்ட பின், வர்த்தக ரீதியாக, கடலுார் துறைமுகமும், காரைக்கால் துறைமுகமும் பெரிய அளவில் பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- நமது டில்லி நிருபர் -