Load Image
Advertisement

ரூ.35 கோடியில் நவீனமாகும் பாம்பன் ரயில் தூக்கு பாலம்

ராமநாதபுரம்: ''பாம்பன் ரயில் துாக்கு பாலம், 35 கோடி ரூபாயில் நவீனமயமாக்கப்படும்,'' என, தெற்கு ரயில்வே பாலங்கள் பிரிவு, தலைமை பொறியாளர் சுயம்புலிங்கம் தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது: அமெரிக்காவின், 'மோர் செஸ்ட்' நிறுவனம், 'லார்சன் அண்ட் டூப்ரோ' நிறுவனத்துடன் இணைந்து, பாம்பன் துாக்கு பாலத்தை, 35 கோடி ரூபாயில், நவீனமயமாக்கும் பணி நடக்க உள்ளது. 600 டன் கொண்ட பாம்பன் துாக்கு பாலத்தில் உள்ள இரும்பு கர்டர்களுக்கு பதில், பைபர் கர்டர்கள் அமைக்கப்படுகின்றன. இதனால், 300 டன் எடை குறையும்.
தற்போது, துாக்கு பாலத்தை ஏற்றி, இறக்க, 30 நிமிடங்கள் தேவைப்படுகின்றன. இதை, எலக்ட்ரிக் மோட்டார் மூலம், ஒரு நிமிடத்தில் துாக்கும் வகையில் அமைக்கப்படுகிறது. மின் தடை ஏற்பட்டால், 'ஹைட்ராலிக்' முறையில், பாலத்தை துாக்க, கூடுதல் வசதி செய்யப்படும்.
பாம்பன் ரயில் பாலம், மிக உறுதியுடன் உள்ளது. துாக்கு பாலம் பணிகள், செப்., மாதம் துவங்க உள்ளது. இதற்காக, ஒரு மாதம் ரயில் போக்குவரத்தை நிறுத்தி, பணிகள் நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

புதிய வேகம் : கடல்நீர் மட்டத்தில் இருந்து, 2.4 மீட்டர் உயரத்தில் உள்ள பாலம், இனி, 3 மீட்டர் உயரத்தில் அமைவதால், சிறிய ரக கப்பல்கள், பாலத்தை திறக்காமலே கடக்க முடியும். இப்பணி முடிந்ததும், பாலத்தில், தற்போது, 15 கி.மீ., வேகத்தில், 22 பெட்டிகளுடன் இயக்கப்படும் ரயில்கள், 45 கி.மீ., வேகத்தில், இனி, 24 பெட்டிகளுடன் இயக்க முடியும்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement