Load Image
Advertisement

நடுவழியில் நின்ற மலைரயில்:பயணிகள் அவதி

 நடுவழியில் நின்ற மலைரயில்:பயணிகள் அவதி
ADVERTISEMENT

மேட்டுப்பாளையம்: இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்ற மலைரயில் பாதி வழியிலேயே திரும்பி வந்தது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு, மலைரயில் குன்னூருக்கு புறப்பட்டு சென்றது. சிறிது நேரத்தில், கல்லாறு ரயில் நிலையத்திற்கு வந்தபோது, திடீரென இன்ஜினில் இழுவைத்திறன் கோளாறு ஏற்பட்டதால், ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. நான்கு மணிநேரமாக ரயில் நிறுத்தப்பட்டதால், பயணிகள் அவதியடைந்தனர். கோளாறு சரிசெய்ய முடியாததால், மீண்டும் மேட்டுப்பாளையத்திற்கே ரயில் திரும்பி வந்தது. இதனிடையே, பயணிகள் அனைவரும் பேருந்து மூலம் குன்னூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


வாசகர் கருத்து (1)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement