தண்டவாளம் துண்டிப்பு: பயணிகள் தப்பினர்
நாகப்பட்டினம்: நாகை காரைக்கால் ரயில் பாதையில், தண்டவாளம் உடைப்பு முன்கூட்டியே கண்டுபிடிக்கப்பட்டதால், எக்ஸ்பிரஸ் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டு, அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
நாகை காரைக்கால் ரயில் பாதையில், காரைக்கால் தனியார் துறைமுகம், 1வது கேட் அருகே, நேற்று அதிகாலை, ரயில் பாதையில், 1 அடி நீளத்திற்கு தண்டவாளம் உடைந்து போயிருந்தது. அவ்வழியே சென்ற லாரி டிரைவர்கள் இதை பார்த்து, ரயில்வே நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதையடுத்து, அதிகாலை, 4:00 மணிக்கு, காரைக்காலில் இருந்து பெங்களூரு புறப்பட்ட பாசஞ்சர் ரயில், பாதி வழியில் நிறுத்தப்பட்டது. ரயில் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டதால், பயணிகள் ரயில்வே ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின், தற்காலிகமாக மாற்று தண்டவாளம் பொருத்தப்பட்டு, ரயில் புறப்பட்டு சென்றது. அதை தொடர்ந்து, ரயில்வே ஊழியர்கள், தண்டவாள உடைப்பை சீரமைத்தனர்.
நாகை காரைக்கால் ரயில் பாதையில், காரைக்கால் தனியார் துறைமுகம், 1வது கேட் அருகே, நேற்று அதிகாலை, ரயில் பாதையில், 1 அடி நீளத்திற்கு தண்டவாளம் உடைந்து போயிருந்தது. அவ்வழியே சென்ற லாரி டிரைவர்கள் இதை பார்த்து, ரயில்வே நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதையடுத்து, அதிகாலை, 4:00 மணிக்கு, காரைக்காலில் இருந்து பெங்களூரு புறப்பட்ட பாசஞ்சர் ரயில், பாதி வழியில் நிறுத்தப்பட்டது. ரயில் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டதால், பயணிகள் ரயில்வே ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின், தற்காலிகமாக மாற்று தண்டவாளம் பொருத்தப்பட்டு, ரயில் புறப்பட்டு சென்றது. அதை தொடர்ந்து, ரயில்வே ஊழியர்கள், தண்டவாள உடைப்பை சீரமைத்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!